தமிழக கேரளா எல்லையான தேனி குமுளியில் மங்கல தேவி கண்ணகி கோவில் முழுநிலா சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழக கேரளா பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தேனி மாவட்டத்திற்கு பொது உள்ளூர் விடுமுறை என்பதால் எல்லா இடத்திலும் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 30000த்திற்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் சிறப்பான முறையில் தயார் செய்து கொண்டுள்ளனர் இதனை கண்ணகி கோவில் அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.