சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் .

காஞ்சிபுரம்
உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி சித்ரகுப்த சுவாமிக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லாத நிலையில் புண்ணிய நகரம்,கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்தர் சுவாமி எனும் பெயரில் தனி கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி காப்பு சாத்தி மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

சித்ரா பௌர்ணமி ஒட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் அதிமுக மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், அனைத்து உலகை எம்ஜிஆர் மன்றம் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் தமிழ்வாணன், பகுதி கழக செயலாளர் பாலாஜி ,ஜெயராஜ், கோல்டு ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *