திருவிடைமருதூரில் தேர்தல் பணி முடிந்து இன்று சொந்த ஊர் திரும்ப உள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவத்தினருடன், தஞ்சை மாவட்ட காவல்துறையினர் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையிலான அணியும், திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் நிலையிலான அணியும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன. இதில் திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய சோழபுரம் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவத்தினருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.