தூத்துக்குடியில் புகழ்பெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினசரி சாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது முக்கிய திருவிழாவான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை பத்தரை மணி அளவில் துவங்கியது பத்து மணி அளவில் அம்பாள் கோவிலில் இருந்து எழுந்தருளி தேருக்கு கொண்டுவரப்பட்டது
அதன் பின்பு சிறப்பு பூஜை நடைபெற்றது தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர் முதலில் விநாயகர் தேரும். அதன்பின்பு சுவாமி அம்பாள் சேரும் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ என்று கோஷமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
தேரோட்டத்துக்கு முன்பு கிராமிய கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் நையாண்டி மேளம் உருமி பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது தேரோட்டம் நடைபெற்ற நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் குளிர்பானங்கள் வழங்கினர்