வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்ததால் பக்தர்கள் மகிழச்சியில் திளைத்தனர். ஏராளமானோர் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்ற எதிர்சேவை நடந்தது.
கோவில் மாநகர் என்ற பெருமைக்கு ரிய மதுரை மாநகரில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதங்களி லும் திருவிழா நடைபெறும். இந்த விழாக்களில் உலகப்புகழ்பெற்றது சித் திரை திருவிழா.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை யும், மதுரை அருகே உள்ள அழகர்கோ விலையும் இணைத்து இந்த விழா நடக் கிறது. அதாவது சைவமும், வைணவ மும் ஒருங்கிணைந்த ஒற்றுமை பெருவி ழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திரு விழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்து டன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவி லில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யா ணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

சித்திரை திருவிழாவுக்காக அழகர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக் கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகு திகளில் உள்ள மண்டபங்களில் எழுந்த ருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர் சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழ கரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர் வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வர வேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ் கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழி நெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக் கிறது.

நேற்று இரவு 10 மணியளவில் தல்லா குளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சன மாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

(செவ்வாய்க்கிழமை) அதி காலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங் கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்த ருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.
இன்று அதிகாலை 5.51 மணிமுதல் 6.10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது வண்டியூர் வீரராக வப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 9.25 மணி வரை வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ராமராயர் மண்டபத்திற்கு சென்ற கள்ளழகருக்கு பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரியும் நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளினார்.
அங்கு நாளை (புதன் கிழமை ) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண் டபத்தில் எழுந்தருளினார்.

பின்பு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கின்றார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்து டன் எழுந்தருள்கிறார்.

இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்குபின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
26-ந்தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிகிறார்.

அன்று இரவு அப்பன்தி ருப்பதியில் திருவிழா நடக் கிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை யொட்டி, மதுரை மாவட்டத் துக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் அழகர் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வைகை ஆற் றில் தண்ணீர் ஓடுவதும் பக்தர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *