சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் மதுப்ரியற்களின் கூடாரமாக மாறி உள்ளது, இதுவரை பயணிகள் அமருவதற்கு சரியான முறையில் அமரும் இடம் இல்லை இருந்தபோதும் சிறிதளவு திண்ணை போல் அமைத்து
கொடுத்துள்ளனர்,
இருப்பினும் இங்கு நிழலில் நிற்க கூட இயலாமல் மிகவும் பயணிகள் சிரமப்படுகின்றனர், இதுவரை கொஞ்ச நாள் காவல்துறையில் 2 பேர் பேருந்து நிலையத்தை காவல் காத்து வந்த நிலையில் தற்போது அதுவும் இல்லாமல் உள்ளது பெண்கள் குழந்தைகள், வயதானவர்கள் என்று யாரும் நிழலை எட்டி பார்க்க கூட முடியா நிலை, மது அருந்திவிட்டு அங்கேயே வாந்தி எடுப்பது, காதுகொடுத்து கேட்க்கமுடியா தகாத வார்த்தைகள் பேசுவது!
காரணம்!! அரசுக்கு வருவாய்தரும் மதுப்பிரியர்களால் இடம் ஆக்கிரமிக்க பட்டு படுத்துறங்கும் கூடாரமாக மாறிவிட்டது, இரவில் கேட்க வேண்டியதே இல்லை!! முழுவதும் பேருந்து நிலையம் ஆக்கிரமிக்க பட்டுள்ளது பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லா நிலை உருவாகி உள்ளது எனவே அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,