தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் மலைமீது எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ குந்தியம்மன்-ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் நூதன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.இந்த விழா நேற்று 21 -ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது.

இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு தீபாரதனை காட்டினார்.

பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ,ஸ்ரீ குந்தியம்மன்-ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீகுந்தியம்மன்-ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலூர் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர், செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *