இராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பிரசித்தி பெற்றபுதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது
கடந்த ஏப்ரல் 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்கள் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பொட்டி பல்லக்கு கண்ணாடி சப்பரம் பூத வாகனம் பூச்சப்பரம் போன்ற வாகணங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் தரிசனம் தந்து அருள் பாலித்தார் இந்நிலையில் பத்தாவது நாளான நேற்று பேர்ச்சொல்லி நாராயனராஜா வகையராக்கள்மற்றும் சாலியர்கள் அம்மனுக்கு மஞ்சல் பட்டு அலங்காரம் செய்து வீதி உலா புறப்பட்டது
ஆண் பெண் குழந்தைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அம்மனை தரிசித்துவிட்டு பூ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா
ஏகேடி ராமராஜா மற்றும் நிர்வாகிகள் திருவிழாவை ஏற்பாடுகள் செய்திருந்தனர்