நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ளது இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ள நிலையில், இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரத்திலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு பாபநாசம் அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்துள்ளன. தொடர்ந்து சாலையின் நடுவே கரடிகள் சுற்றி திரிவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்

குறிப்பாக சில தினங்களுக்கு முன் கல்லிடைக்குறிச்சி பகுதியில் ஊருக்குள் உலா வந்த கரடியை பொதுமக்கள் விரட்டியபோது பெண் ஒருவரை கரடி தாக்கியது எனவே இரவு நேரத்தில் கரடிகள் ஊருக்குள் உலா வருவதால் உடனே கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க முதலியார்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தொடர்ந்து இந்த பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *