சின்னமனூர் அருகே சூடம் மாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள சூடம்மாள் அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சூலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சூடம்மனுக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் பன்னீர் இளநீர் உட்பட 13 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது இந்த விழாவில் மூர்த்தி நாயக்கன்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்