கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலுக்கர்பட்டி கிராமத்தில் ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சிறப்பாக நடைப் பெற்றது.
இதையொட்டி காலை 9.30 மணிக்கு கோயில் விமானம் மற்றும் ராஜகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
அதனையொடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் விழா தலைவர் கந்தசாமி, செயலாளர் மாடசாமி, பொருளாளர் ஜெயசீலன், துணை தலைவர்கள் துரைராசு, சங்கர், துணை செயலாளர் காளிராஜ், இணை செயலாளர் கலைஞர், ஊர் நாட்டாமை குருசாமி, துணை நாட்டாமை சாமுவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.