சிவகங்கை மாவட்டம் பயணிகளின்
கனிவான கவனத்திற்கு!
தென்னக இரயில்வே நேரம் மாற்றம் அறிவுப்பு,காரைக்குடி திருவாரூர் இரயிலின் நேரம் மே 3ம் தேதி முதல் மாற்றம் செய்து இரயில்வே துறை அறிவிப்பு.
திருச்சி இரயில்வே கோட்டத்திலிருந்து பல வருடங்களாக திருவாரூரிலிருந்து காரைக்குடி வரையிலும் டெமோ பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு
வருகின்றது..
இந்த இரயில், திவாரூரில் தற்போது காலை 8:25 புறப்பட்டு காரைக்குடிக்கு காலை 11:30 மணிக்கு வருகின்றது.
இனிமேல் திருவாரூரில் காலை 6-20க்கு புறப்படும் இந்த இரயில் காரைக்குடிக்கு (வண்டி எண்:06197-06198) காலை 9 -35க்கு வரும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
மறுமார்க்கத்தில் “காரைக்குடியிலிருந்து
மாலை 4-மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக மாலை 06-மணிக்கு புறப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
இந்த இரயில் திருவாரூக்கு இரவு 9-25 மணிக்கு சென்றடையும் சென்னை இரயில் நேரமாற்றத்தினால் காலையில் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு மேலும் இந்த இரயிலுக்கு இணையாக,
சென்னை எழும்பூரிலிருந்து மன்னார்குடிக்கு புறப்படும் “மன்னை எக்ஸ்பிரஸ்” இரயில் மூலம் வரும்பயணிகள் திருவாரூரில் இறங்கி,காரைக்குடி வரை வருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதால் பெரிதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
இத்தகவலைக் காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.