கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தலில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான செ.மா.வேலுச்சாமி கலந்துகொண்டு தனது வாக்கினை செலுத்தினார்.

கோயம்புத்தூர் கிரிமினல் கோர்ட் வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில் 2024 மற்றும் 25க்கான தேர்தல் நடைபெற்றது.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர்,துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான வழக்கறிஞர் செ.மா வேலுச்சாமி தனது வாக்கினை செலுத்தினார். அப்போது அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே தாமோதரன், கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் மாவட்ட இணை செயலாளர் வணிகராஜ் நத்தானியேல் ஆறு சாமி முகமது நதிர் கே.சி.எம் கார்த்தி ராமச்சந்திரன் முத்து இளங்கோவன் ரிச்சர்ட் மற்றும் சக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வாக்குகளை செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *