பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை
தென்காசி மாவட்டம்,
பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 170 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கௌசிக் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஷர்மிள் ஏஞ்சலின் 591 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், முகம்மது தவ்ஃபீக் அலி 586 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ் 2
தேர்வு எழுதிய 171 பேர்களில் 2 மாணவர்கள் 590 மதிப்பெண்களுக்கு மேலும், 6 மாணவர்கள் 580 மதிப்பெண்களுக்கு மேலும், 39 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு, மேலும் 96 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 11 பேர், இயற்பியலில் 3 பேர், வேதியியலில் 3பேர், வணிகவியலில் 4 பேர், பொருளியலில் ஒருவர், கணினி அறிவியலில் 6பேர், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 30 பேர் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல், செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படௌத்துள்ள மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளியின் முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.