தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை தேனி மாவட்ட அறங்காவலர்கள் குழு உறுப்பினர் கே ஆர் ஜெயபாண்டியன் கலைவாணி குடும்பத்தார்கள் சார்பில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது
இந்த அன்னதானத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார் இந்த அன்னதானத்தில் கம்பம் மற்றும் இதை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னதானத்தை சிறப்பித்தனர்