தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி நகர் திமுகவினர் சார்பாக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் பொதுமக்களுக்கு கொளுத்தி வரும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க இலவச நீர் மோர் அமைத்து நீர்மோர் தண்ணீர் பழம் வாழைப்பழம் வெள்ளரிக்காய் மற்றும் இளநீர் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பொதுமக்களின் தாகம் தீர்க்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் இளநீர் மற்றும் வெள்ளரிக்காய் தண்ணீர் பழம் ஆகியவற்றை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை செயற்கு உறுப்பினரும் போடி நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான சங்கர் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed