தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம் நடவடிக்கை எடுக்குமா மின்சாரத்துறை அதிகாரிகள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் ஆறாவது வார்டு பகுதியில் வஞ்சி ஓடை குறுக்குத் தெருவில் மின்கம்பம் ஒன்று வாயைப் பிளந்து இடிந்த நிலையில் மிகுந்த சேதாரத்தோடு காட்சியளிக்கிறது
இது அப்பகுதி மக்களுக்கு உயிர் பலி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வரும் மின் கம்பத்தை உடனடியாக மாற்றி அப்பகுதி மக்களுக்கு உயிர் பயத்தை போக்கி மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்