தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி இந்திரா குடியிருப்பைச் சேர்ந்த அக்னி கணேசனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மூக்கையா மகன் சரவணன் வயது 49 இவர் இப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் ஆய்வாளர் வனிதாமணி தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட நெகிழி பாத்திரத்தில் 100 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது

மேலும். தொட்டியில் சாராயம் காய்ச்சுவதற்கான ஊரல் மற்றும் மூலப் பொருட்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர் இதன்படி அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சரவணன் தம்பி குமார் வயது 45 உறவினர் ராஜேந்திரன் வயது 55 ஆகிய மூவரை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

இதுகுறித்து ஆய்வாளர் வனிதா மணி கூறும்போது இதுபோன்று போதைப் பொருள்கள் பற்றி தகவல் கிடைத்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *