தேனி வடக்கு மாவட்டம்,போடி கிழக்கு ஒன்றியம் பூதிப்புரம் பேரூராட்சியில், தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆன தங்க தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படியும் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பிஅய்யப்பன் ஆலோசனை படியும், பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளரும் பூதிப்புரம் பேரூராட்சி மன்றத் தலைவருமான
பா. கவியரசு தனது சொந்த செலவில் தற்பொழுது கொளுத்தி வரும் கோடை வெயிலில் கிராம மக்களின் தாகம் தீர்க்க பூதிப்புரம் கிராம மக்களுக்கு நீர் மோர் பந்தலை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் நுங்கு வெள்ளரிக்காய் வாழைப்பழம் தர்பூசணி போன்ற தாகம் தீர்க்கும் வகையில் நீ மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து விட்டார்
இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஐயப்பன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம். பொன்னையன் மாவட்ட ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்