தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் இல. சுதா பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சிஎஸ்ஐ.பவுல் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் இல.சுதா பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், சங்கரநாராயணன் , மாநில விவசாய அணி துணை செயலாளர் அழகுநேரி மோகன்தாஸ், மாவட்ட துணை செயலாளர் பொன். ஆனந்தராஜ், நகர கழக செயலாளர் இரத்தின வேல்குமார், மதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மாவட்ட மதிமுக இளைஞரணி துணை செயலாளர் முகமது ஹக்கீம், தென்காசி, விருதுநகர் மண்டல இணையதள அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் சங்கரசுப்பு, தென்காசி நாடாளுமன்ற தொகுதி இணையதள அணி பொறுப்பாளர் ரமேஷ் சங்கரன், சட்டமன்றத் தொகுதி இணையதள அணி பொறுப்பாளர் ராகவன் ராஜகோபால், இணையதள அணி அரசகுமார், சங்கரன்கோவில் நகர கழக துணை செயலாளர் அழகுவேல் முருகன், பூக்கடை பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி ஜலால்,காளியப்பன், மைதீன், ஆறுமுகம், மதன் குமார், பூக்கடை பழநி, சக்திவேல், சிங்கிலிபட்டி பாலபாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *