தென்காசி மாவட்டம்,ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 12ம் வருப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆய்க்குடி அமர்சேவா சங்கம்
சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதிய 51 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த பள்ளியின் மாணவி
ஆர்.சங்கீதா 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி எஸ்.மகேஷ்வரி 548 மதிப்பெண்கள் பெற்று இர இ மும், மாணவி எஸ்.சங்கிதா 547 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெள்ள சாதனை படைத்துள்ளனர்.
மாணவி ஆர்.சங்கீதா பொருளியல். கணக்குப்பதிவியல் கணினி பயன்பாடுகள் ஆகியவற்றில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளியில் 25 மாணவர்கள் 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த பள்ளியில் +2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளையும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.சங்கரராமன், பள்ளி தாளாளர் எஸ்.பட்டம்மாள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் பாராட்டினர்