தென்காசி
கேரள மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ.பத்மநாதன்
கொல்லம் மாவட்ட திமுக செயலாளர் ரெசுராஜ் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த கேரள மாநில தொழில் அதிபர் சந்தீப் நாயருக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட திமுக செயலாளர் ரெசுராஜ், திமுக மண்டல செயலாளர் அஜ்மல், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வக்கொடி ராஜா மணி, திமுக மாவட்ட தொண்டர் அணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், கடையம் தெற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வின்சென்ட், முன்னாள் ஆனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலீல் ரகுமான், முன்னாள் குலையநேரி ஒன்றிய கவுன்சிலர் திருமலை குமார், ஆண்டிபட்டி காலனி ஒன்றிய பிரதிநிதி தங்கராஜ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1ம் தேதி கேரள மாநிலம் புனலூர் பகுதியில் திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பொறித்த அட்டையுடன் கூடிய ஐந்தாயிரம் நோட்டு புத்தகங்களை ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.