தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மூலனூர் அருகில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு செல்வதற்காக டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தில் ஏறி பயணித்துள்ளனர்
இவர்கள் சென்ற வாகனம் சத்திரம் பகுதி அருகே சென்றபோது டாட்டா ஏஸ் வாகனத்தின் முன் சக்கரம் வெடித்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த பொட்டியம்மாள் 56 என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காயமடைந்தவர்கள் தாராபுரம் மற்றும் வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மூலனூர் போலீசார் விசாரணை.