சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடைகால வெப்பத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்க அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் உத்திரவின் பேரில் பேரூர் அமமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநில மருத்துவ அணி இணைச்செயலாளர் நோவா செல்வராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் சர்பத் உள்ளிட்ட பானங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் திரவியம். ஒன்றிய துணை செயலாளர் மீனாட்சிசுந்தரம். அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட பிரதிநிதி மகேந்திரன் மற்றும் ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகி என பலர் பங்கேற்றனர்.