எபி பிரபாகரன் செய்தியாளர்.
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வினை நிகழ்வினை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கினார்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்
திரளான மக்கள் நீர் மற்றும் மோர் அருந்தி பயன்பெற்றனர் இந் நிகழ்வினை பெரம்பலூர் கிழக்கு தொகுதி மற்றும் பெரம்பலூர் நகரம் பொறுப்பாளர்கள் நகரச் செயலாளர் ராஜேந்திரன் நகர இணைச்செயலாளர் ரஞ்சித் குமார், வை. வேலுச்சாமி சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி செந்தில்குமார் வெங்கடேசன் காமராஜ் கனகராஜ் குமுளீஸ்வரி இவர்கள் முன்னிலையில் சிறப்பாக முன்னெடுத்தனர்.