பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பேரூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி பொதுமக்களுக்கு நீர் மோர் தர்ப்பூசணி இளநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா பாபநாசம் தெற்கு வீதியில் நகர அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது. பாபநாசம் பேரூர் செயலாளர் கோவி. சின்னையன் தலைமை வைத்தார் பாபநாசம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் துரை.சண்முகபிரபு பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்ப்பூசணி இளநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய தலைவர் சபேசன் மாவட்ட பிரதிநிதி மணி, நகர அவை தலைவருக்கு அப்துல் காதர் நகர துணைச் செயலாளர் அன்பழகன் வார்டு செயலாளர் ஜம்புலிங்கம் ஒன்றிய துணை செயலாளர் திலகவதி கணேசன் ஒன்றிய பேரவை செயலாளர் முருகதாஸ். , சதீஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர் .