வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர் வி. சௌந்தர்ராஜன் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம் (யுபிஎஸ்) வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர் வி. சௌந்தர்ராஜன் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம் (யுபிஎஸ்) வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ்,செயற்குழு உறுப்பினர் நல்லம்பூர் க. கிருஷ்ணமூர்த்தி, வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், முன்னாள் மாணவர் வி. ரத்தின சபாபதி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *