கம்பம் நகரில் மாபெரும் புத்தக கண்காட்சி கம்பம் தொழில் அதிபர் ஜேஎஸ்டி அன்பழகன் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் விடுமுறை நாட்களை வாசிப்போடு கொண்டாடும் விதமாக தேனி மாயா புத்தக நிலையம் நடத்தும், 10 நாள் புத்தக கண்காட்சியை, கம்பம் குலாளர் திருமண மண்டபத்தில் தொழில் அதிபர் ஜேஎஸ்டி அன்பழகன் தலைமை வகித்து திறந்து வைத்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சிவாஜி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மாவட்டச் செயலாளர் தமிழ்மணி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கம்பம் நகர தொழிலதிபர் டாக்டர் வேல் பாண்டியன், வின்னர் அலீம், பரமன், கவிஞர் திராவிட மணி, சிவ இளங்கோ, போட்டோ பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *