சோழவந்தான் மே;10

சோழவந்தான்அருகே கருப்பட்டி இரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குடியிருந்து வருபவர் கணேசன் என்பவரது மகன் சூரியா 24.இவர் இரும்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்தாண்டு எட்டாம் வகுப்பு படித்து.

வந்த இதே ஊரைச்சேர்ந்த சிறுமி பிரியா 16.(பெயர் மாற்றம்) ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்தபின்பு கடந்த நவம்பர் மாதம் வாடிப்பட்டியில் உள்ள பொன்பெருமாள் கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டு தனது வீட்டிற்கு திருமணகோலத்தில் சிறுமியை அழைத்து சென்று போது இத்திருமணத்திற்கு சூரியாவின் பொற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்

இதனையெடுத்து சூ சியா தனது வீட்டின் முன்பு இருந்த காலி இடத்தில் ஆஸ்பெட்டாஷ் சீட் வீடு அமைத்து அதில் சிறுமி பிரியாவுடன் பல மாதங்கள் குடும்ப நடந்தி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு இரத்தசோகை நோயால் உடல் நிலை சரியில்லாமல் போனதால் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 8.மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததையெடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவ
மனைக்கு மேல் சிகிச்சைக்காக சிறுமியை அனுப்பி வைத்தனர்.பின்பு இது குறித்து சிறுமியின் தாய் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரிபேரில் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார். சூரியாவை 24. கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *