பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் அண்மைக்காலமாக குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து அட்டகாசம் செய்து வருகின்றன,
கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி கையில் கொண்டு செல்லும் அபிஷேகப் பொருட்களையும் பிடுங்கி செல்கின்றன ஆகவே மாவட்ட நிர்வாகம் இதற்கான உரிய தீர்வு காண வேண்டும் எனவும் மேலும் கோடைக்காலம் என்பதால் இங்குள்ள குரங்குகளுக்கு போதுமான தண்ணீர் மற்றும் உணவு கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும் என்று இப்பகுதி வாழ் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.