உத்தமபாளையம் அருகே பிளஸ் 2வில் சாதனை படைத்த மாணவிக்கு தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் பாராட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டியை சேர்ந்த அழகர் ராஜா கமலா ஆகியோரின் மகள் மோனிகா இவர் ஆனைமலையான் பட்டியில் உள்ள பெனெட்டிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் 600 க்கு 576 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார் .
இந்த மாணவிக்கு 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் தேசிய செட்டியார்கள்பேரவை நிறுவனத் தலைவர் பி. எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மாணவி இல்லத்துக்கு நேரடியாக சென்று அவரை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பீட்டர் தேசிய செட்டியார்கள் பேரவை மாவட்ட நகர ஒன்றிய பேரூர் ஊரக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்