தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான 36-வது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி கும்பகோணத்தில் உள்ள அன்னை கல்வி
கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த போட்டியானது வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளாக போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடிப்பர்வக்ள மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் விளையாடுவார்கள். தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் இணைச் செயலாளர் செந்தில்குமரன் பழனிவேலு, தலைமை நடுவர் சதீஷ், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் தரும.சிலம்பரசன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கணேசன், விழாக்குழு நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.