அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 13 மனுதாரர்களின் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜ் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.