கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழா,கண்கவரும் வகையில் பாரம்பரிய பழங்கால பொருட்கள் முதல் உணவுகள் வரை இடம்பிடித்திருந்தன.
கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழாவில் பாரம்பரிய பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள், உடைகள் உணவுகள் என 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
கோவையை கொண்டாடும் விதமாக கோவை விழாவின் ஒரு பகுதியாக முதல் முறையாக 7, 8-ம் தேதிகளில் கொடிசியா வளாகத்தில் செட்டிநாடு திருவிழா நடைபெற்றது இந்த திருவிழாவை செட்டிநாடு குழும தலைவர் முத்தையா துவக்கி வைத்தார்.
இதில் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த பல பொருட்களின் அணிவகுப்பை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.மேலும் செட்டிநாடு நகர கோயில்கள், கடைவீதி பொருட்கள், சுவர்களில் ஸ்டென்சில் ஆர்ட்,செட்டிநாடு உணவு வகைகள், சிறுவயதில் விளையாடி மறந்து போன பல பாரம்பரிய விளையாட்டுக்கள்,உள்ளிட்டவைபி 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் இதனை மக்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மனதிற்கு பிடித்ததை வாங்கி செல்லவும், உணவு வகைகள் சமைத்து கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ரசித்து, ருசித்து சென்றனர்.