ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கமலாம்பாள் நகரில் அமைந்துள்ள பீட்ஆப்பையர் அகாடமியில் சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளாம், தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவினை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடனும் ஒரே விதமான புத்தாடையுடனும் அணிவகுத்து சிறப்பாக கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் ஏன் தமிழகத்தில் கூட இதுவே முதல் சமத்துவ பொங்கல் ஆக சிறப்பாக நடைபெற்று உள்ளது.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள் சி எம் அறக்கட்டளை மற்றும் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் கல்வி நிறுவனங்களின் நிர்வாக மேலாளர் வி சின்ராஜ் முன்னிலை வகித்தனர் பீட்ஆப் பையர் மாஸ்டர்ஸ் பகுத்தறிவு, அரவிந்த், இந்துமதிஅரவிந்த், ஹரி பீட்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் சிறுவர் சிறுமியரின் சிலம்பு விளையாட்டு மற்றும் இசை நாற்காலி சுற்று விளையாட்டு நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *