வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல்.
தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு கே.எப்.சி கால்பந்துட்ட கழகம் நடத்தும் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் மூன்றாம் நாள் போட்டியை திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், கே.எப்.சி குழுவினர் மணிகண்டன், சுரேஷ், சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.