மதுரை மாநகர் மேலவாசல் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் குடியிருந்து கல்வி பயின்று முன்னேறிய முதல் பட்டதாரிகளுக்கும் முதல் பெண் வழக்கறிஞருக்கும்விரதுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பறையிசை கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
நீலப்பருந்துகள் குழு நடத்திய இந்த விருதுவழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அழகுமணி, திடீர்நகர் காவல்நிலைய ஆய்வாளர் காசி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக்,ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு நீலப்பருந்து விருதுகளையும் வெள்ளிப்பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.