பெரியஜோகிபட்டியில் வழங்கிய நிலையில் இயந்திர கோளாறு ஆனதால் மக்கள் தவிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியத்தின் கீழ் இருக்கக்கூடிய சாமல்பட்டி கூட்டுறவு சொசைட்டி யின் கீழ் இயங்கும் அந்தேரிப்பட்டி ஊராட்சிக்குப்பட்ட சாலஜோகிபட்டி,வைத்தியகார கொட்டாய், கன்னிகார ஜோகிபட்டி,நடுஜோகிப்பட்டி மக்களுக்கு நியாய விலை கடையில் பொருட்கள் வழங்க கூடிய பெரிய ஜோகிபட்டி ரேஷன் கடையில் காலை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக டோக்கன் வழங்கி காத்திருந்தனர். ஆர்வத்துடன் பொதுமக்களுக்கு நியாய விலை கடைக்கு வந்த பொழுது மூன்று நபர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிவிட்டு இயந்திர கோளாறு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நியாயவிலை கடை ஊழியர் வந்திருந்த அனைத்து பொதுமக்களின் ரேஷன் அட்டைகளையும் வாங்கி வைத்துக்கொண்டு இயந்திர கோளாறு எனக் கூறி காத்திருக்க சொல்லிகாத்திருக்க சொல்லி சென்றார். கொடுத்த ரேஷன் அட்டையும் கொடுக்கவில்லை,பொங்கல் பரிசு தொகுப்பும் வருமா என காத்திருக்கும் பொதுமக்கள் புலம்பினர்.