பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர் பிரகதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர் கவுக்கான் மருபிக்கோ சென்சாய் தமிழ்நாட்டில் 3 நாள் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவனை தரிசிக்க தொடங்கிய ஜப்பான் நாட்டுப் பயணி கவுக்கான் மருபிக்கோ சென்சாய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் நகரில் எழுந்தருளியுள்ள விருத்தகிரீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் சிவ பக்தராக தமிழ்நாட்டில் மூன்று நாள் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *