சோழவந்தான்

சோழவந்தான் அருகே மேலக்காலில் வாடிப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில் அனைத்துகிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லிக்கன்று நடவு செய்தனர். இப்பகுதியில் உள்ள தரிசு நில தொகுப்பு திட்டத்தில் 9 விவசாயிகளின் 12 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, ஒரு குழு அமைத்தனர்.

இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மானியத்துடன் கூடிய மோட்டார், போர்வெல், நெல்லிக்கன்று உள்ளிட்டவைகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர். இதில் 12 ஏக்கர் தரிசு நிலத்தின் முதற்கட்டமாக சிவக்குமார், மீனா, வில்சன் ஞானமுத்து, அருள்மனோகரன் ஆகியோரின் நிலத்தில் நெல்லிக்கன்றை வேளாண் உதவி இயக்குநர் பாண்டி தலைமையில் நடவு செய்தனர்.

இந்நிகழ்வில் தோட்டக்கலை உதவி இயக்குநர் சரவணபிரியா, உதவி வேளாண் அலுவலர் விக்டோரியா செலசஸ், உதவி தோட்டக்கலை அலுவலர் வினோத் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *