ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர். ஐதராபாத் நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை அவரது தங்கை மறுத்தார். இந்த நிலையில் ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர். மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். சரத்பாபு ஏஐஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில் என்று தமிழின் பெருமைக்குரிய அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்து உள்ளார். சரத்பாபுவின் முதல் மனைவி தெலுங்கு நடிகை ரமா பிரபா. இவரை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். 1970 களில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘சாந்தி நிலையம்’ மெகா ஹிட் திரைப்படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர்களது திருமணம் 1980 ல் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தின் ஆயுள் வெறும் 8 வருடங்களே! பிறகு இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். பிறகு சரத்பாபு நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *