வலங்கைமானில் நிலா முற்றம் தமிழ் இலக்கிய கவியரங்கம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் திருமண இரண்டு கூடத்தில் நிலா முற்றம் தமிழ் இலக்கிய பேரவையின் 300-வது கவியரங்கம் நடைப்பெற்றது. இக் கவியரங்கத்திற்கு நிலா முற்றம் தமிழ் இலக்கியப்
பேரவையின் நிறுவனர் முத்துப்பேட்டை மாறன் தலைமை வகித்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். தலைவர் கவிமாமணி கோவிந்தராஜன் வரவேற்றார்.
வலங்கைமான் அரசினர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ் கவியரங்கை துவக்கி வைத்தார். இக் கவியரங்கில் 8அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர். கவியரங்க அமர்வின் தலைமை கவிஞர்களாக வேல்முருகன், ஜெயந்தி, பாலாஆசினி, தமிழன்பன், தஞ்சைத் தரணியன் உள்ளிட்டோர்
செயல்பட்டனர்.
இக் கவியரங்க அமர்வில் தலைமை ஏற்க ஸ்விட்சர்லாந்திலிருந்து ரூபா அன்றன் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இக் கவியரங்கில் 300க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர். கவியரங்க நிறைவில் நிலா முற்றம் தமிழ் இலக்கியப் பேரவையின் பொருளாளர் செந்தில் சுலோ நன்றி கூறினார்.