வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா மூலம் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவில் வருகை தந்து தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிப்பட்டு விடியும் காலை வரையில் அங்கேயே தங்கியுள்ளனர். அமாவாசை நாளில் இரவில் தங்கி அம்மனை தரிசனம் செய்யும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புகழ் பெற்ற மாரியம்மன் கோயிலில் அமாவாசை தோறும் இரவில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்த வருபவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் தேவைகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.