தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தென்காசி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள திட்டங்களான நில எடுப்புகள், பட்டா மாறுதல், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அரசு விடுதிகள், உணவு தர கட்டுப்பாடு, சுரங்கத்துறை பணிகள், மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, முதலமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அனைத்து அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *