கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆலோசனைக்கு இணங்க வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டான்மோர், ஆத்துமட்டம், சவராங்காடு, புதுத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 4 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேபிஆர் என்ற ஜே.பாஸ்கர் தலைமையில் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
முன்னதாக வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக்கொடியேற்றினர் அதைத்தொடர்ந்து லோயர் பாரளை எஸ்டேட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது வெகுசிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் வார்டு செயலாளர் தனசேகரன், வார்டு பிரதிநிதி பேபி நிர்வாகிகள் தனம், தாமரை,ஜெயா, ராஜேந்திரன் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்