ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா! ஏராளமான பெண்கள் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கர் கோவில் அருகே உள்ள மகளிர் மற்றும் சிறார் நூலகத்தில் வைத்து உலக புத்தக வாசிப்பு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாரதி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி மகேஷ் தலைமையில் கவிஞர் ஆனந்தி, மைதிலி கவிஞர், ரமணி மாடசாமி உள்பட பலர் பங்கேற்று புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், புத்தகம் வாசிப்பதால் உலகறிவு மற்றும் குடும்பத்தை வழிநடத்தும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். ஏற்பாடுகளை மனிதி அமைப்பின் தலைவர் செல்வி தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.