சென்னை
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவை எதிர்த்தும் தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் மாதவரம் மூலக்கடை சந்திப்பு அருகே 15 நிமிடம் வாகன போக்குவரத்தை நிறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில் மாதவரம் பகுதி செயலாளர் கமலக்கண்ணன் ,டி ஜே கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், லூர்துசாமி, வழக்கறிஞர் லூர்துசாமி மற்றும் தொழிலாளர்கள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் கொளத்தூர் செங்குன்றம் பகுதிகளிலும் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *