பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனித்தேர்வர்களாக பொது தேர்வுகளை எழுத சிறைச்சாலைகளுக்குள் பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறைவாசிகள் தேர்வெழுதி வருகின்றனர்.
புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக 36 கைதிகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் ஒருவர் தேர்வெழுதாமல் 35பேர் மட்டுமே தேர்வுகளை எதிர்கொண்டனர்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் தண்டனை சிறையில் தேர்வெழுதிய 26ஆண் கைதிகளில் 24பேரும், புழல் விசாரணை சிறையில் தேர்வெழுதிய 6ஆண் கைதிகளும், புழல் மகளிர் சிறையில் தேர்வெழுதிய 3பெண்களில் 2பெண் கைதிகள் என 32 பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக சிறையில் தேர்வெழுதியதில் 91.43% தேர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. சிறைச்சாலையில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.