என்ற வடிவேலின் காமெடி போல் பிரபல ரவுடி காவல் நிலையத்தில் சரண்டைவதை தனது ஆதரவாளர்கள் மூலம் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜமால்.இவர் மீது புதுச்சேரி, கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் செயல்படும் கடைகளில் ரவுடியான ஜமால் மாமூல் கேட்டு வியாபாரிகளை மிரட்டியுள்ளார்.இதனால் பாதிப்படைந்த வியாபாரிகள் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஜமால் மீது புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமாலை தேடி வந்த நிலையில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார் சரணடைய கூறினர்.

போலீசாரின் மிரட்டலுக்கு பயந்த ஜமால் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார்.சரணடைவதற்கு முன்பு தான் பிரபலமடைய வேண்டும் என்பதால் தனது ஆதரவாளர் ஒருவரை வைத்து சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட கூறியுள்ளார்.

அதன் படி ஜமால் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்த அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு ஜெயிலுக்கு போவதை நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் பாத்துக்கோங்க நான் ரவுடி தான் என்று கூறியிருப்பார்

அதேபோல் இன்று ரவுடி சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வைரலாகி வருவதுடன் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *