கோவை மாவட்டம் வால்பாறையில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பணிகள் மற்றும் துவங்கவிருக்கும் பணிகள் பற்றிய ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவரை சந்தித்த வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள தணியார் தோட்ட நிறுவனங்கள் நகராட்சியிடம் ஒப்படைப்பு செய்த பழுதான சாலைகளை ஆய்வு மேற்க் கொண்டு அரசுடைமையாக்கி சாலைகளை சீரமைக்கவும் அதேபோல நீண்டகாலமாக மிகவும் பழுதாகி உள்ள ஊசிமலை எஸ்டேட் சாலையையும் ஆய்வு மேற்கொண்டு அரசுடைமையாக்கி அப்பகுதி மக்களின் நலன் கருதி விரைந்து பணிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த நகர் மன்ற தலைவரின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உரிய பரிந்துறைசெய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர்கள் இ.ரா.சே.அன்பரசன்,ஜெ.மணிகண்டன் மற்றும் பலர் உடனிருந்தனர்